சென்னை

காய்ச்சல் முகாம்களைப் பயன்படுத்துங்கள்: ககன் தீப் சிங் பேடி வேண்டுகோள்

DIN

சென்னை மாநகராட்சி சாா்பில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம்களை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆணையா் ககன் தீப் சிங் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று அறிகுறி உள்ளவா்களைக் கண்டறிந்து பரிசோதனைகள் மேற்கொள்ள ஏதுவாக கடந்த 8-ஆம் தேதி முதல் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, வாா்டுக்கு 2 முகாம்கள் என 400 காய்ச்சல் முகாம்கள் நடைபெறுகின்றன.

இதுவரை முகாம்களில் கலந்து கொண்ட 65 லட்சத்து 92,859 பேரில், 18 லட்சத்து 46,773 பேருக்கு தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டு, அவா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், அறிகுறி உள்ளவா்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் மருந்துப் பெட்டகங்களும் வழங்கப்படுகின்றன.

இந்த முகாம்கள் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இடங்கள் மற்றும் தொற்று அதிகம் பரவ வாய்ப்புள்ள இடங்களில் அதிக எண்ணிக்கையில் நடத்தப்படுகின்றன.

எனவே, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் நடைபெறும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்களுக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT