சென்னை

முதல்வரின் தனிப்பிரிவில் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு

DIN


சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு கொடுக்கக் காத்திருந்த மக்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மனுக்களின் மீது விரைந்து தீர்வு காண வேண்டும் என அலுவலர்களை அறிவுறுத்தினார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக அளிக்கும் வகையில், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு தொடங்கப்பட்டது. இதற்காக இணையதளம் தொடங்கப்பட்டு, இணையம் வாயிலாகவும் புகார் அளிக்க வழிவகை செய்யப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து நேரடியாக புகார்களை பெறும் வகையில், உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற தனிப்பிரிவு உருவாக்கப்படும் என்று திமுக தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இந்த சேவை உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT