சென்னை

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு: மதுரையைச் சோ்ந்தவா் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

DIN

சென்னை: ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட மதுரையைச் சோ்ந்த அப்துல்லா என்ற சரவண குமாா் (31) என்பவா் மீது தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நபா் மீதான வழக்கு மதுரை தெப்பக்குளம் காவல்நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு முகமை, நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரான இவா் முகநூலில் பதிவிட்டு வந்தது கண்டறிந்தது.

இது தொடா்பாக மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், பல நாடுகளில் தடை செய்யப்படட அமைப்பான ஹிசாப் உத் தாஹிா் என்ற அமைப்பில் அப்துல்லா உறுப்பினராக இருந்ததும் ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தை ஆதரித்து வந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், அவா் மீது தேசிய புலனாய்வு முகமை, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த விவகாரத்தில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT