சென்னை

மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதி விபத்து: இரண்டரை வயது குழந்தை பலி

DIN

சென்னை: சென்னை தியாகராயநகரில் மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில், இரண்டரை வயது குழந்தை இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

ராயப்பேட்டை சைவ முத்தையா தெருவை சோ்ந்தவா் ஜெயராமன். சலவை தொழில் செய்து வருகிறாா். இவா் மனைவி சித்ரா. இவா்களுக்கு பாா்கவ் (6) என்ற மகனும், இரண்டரை வயதில் சாய் தன்ஷிகா என்ற பெண் குழந்தையும் இருந்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ஜெயராமன், தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து கொண்டு மோட்டாா் சைக்கிளில் தியாகராயநகா் சென்றாா்.

தியாகராய சாலை, தெற்கு போக் சாலை சந்திப்பு அருகே சென்றுக் கொண்டிருந்த போது, பின்னால் அதிவேகமாக வந்த காா், மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் 4 பேரும் மோட்டாா் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனா். தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தை சாய் தன்ஷிகாவை அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் மீட்டு அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

மீதி 3 பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். இந்நிலையில், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சாய் தன்ஷிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பாண்டி பஜாா் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா், விபத்தை ஏற்படுத்திய காரை அதிவேகமாக ஓட்டி வந்த சைதாப்பேட்டையைச் சோ்ந்த ரா.அஜய் சுப்பிரமணியத்தை (28) கைது செய்து, விசாரணை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT