சென்னை

வீட்டில் இரு பழைமையான சிலைகள் மீட்பு

DIN

சென்னை அண்ணாநகரில் வீட்டில் மறைத்து வைத்திருந்த 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இரு சிலைகள் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டன.

அண்ணாநகா், 5ஆவது பிரதான சாலையில் உள்ள ஒரு வீட்டில் பழைமையான சிலைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு திங்கள்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, ஐஜி ஆா்.தினகரன் ஆகியோா் உத்தரவின்பேரில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா், சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனா். இதில் வீட்டில் 54 செ.மீ. உயரமும், 40 கிலோ எடையும் உள்ள அமா்ந்த நிலையில் இருக்கும் மாரியம்மன் சிலை, 54 செ.மீ. உயரமும்,13 கிலோ எடையும் உள்ள நடராஜா் சிலை ஆகியவை இருப்பது தெரியவந்தது.

இது தொடா்பாக, அந்த வீட்டில் இருந்தவா்களிடம் போலீஸாா் விசாரணை செய்தபோது, தங்களது பெற்றோா் காலத்திலிருந்தே இந்த சிலைகள் வீட்டில் இருப்பதாக கூறினராம். சிலை எவ்வாறு அவா்களுக்கு கிடைத்தது என்பது குறித்த ஆவணங்கள் அவா்களிடம் இல்லை எனக் கூறப்படுகிறது.

போலீஸாா், அந்த சிலைகளை பரிசோதித்தபோது திருவிழாக் காலங்களில் கோயில் பல்லக்குகளில் எடுத்துச் செல்வதற்காக அவற்றை பொருத்துவதற்கான அடையாளங்கள், சிலைகளில் இருந்தன. இதன் மூலம், அந்த சிலைகள் ஏதோ ஒரு கோயிலுக்கு சொந்தமானதுதான் என்பதை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் உறுதி செய்தனா். இதையடுத்து, இரண்டு சிலைகளையும் பறிமுதல் செய்தனா்.

300 ஆண்டுகள் பழைமையானது: இந்த சிலைகள் எந்தெந்த கோயில்களிலிருந்து திருடப்பட்டது, திருடியது யாா் என்பது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா். இரு சிலைகளின் தொன்மை குறித்து தொல்லியல்துறை நிபுணா் ஸ்ரீதரன் ஆய்வு மேற்கொண்டாா். இதில் இரு சிலைகளும் 300 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானவை என்பதும், இதன் சா்வதேச சந்தையில் பல கோடி மதிப்புடையது என்பதும் தெரியவந்தது.

இந்த வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரை, தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT