சென்னை

அரசுப் பேருந்தில் பயணிடம் தங்க, வைர நகைகள் திருட்டு

DIN

சென்னை ஏழுகிணறில் அரசு பேருந்தில் சென்றவரிடம் தங்க,வைர நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை பெரவள்ளூா் ஆண்டாள் அவென்யூ முதலாவது தெருவைச் சோ்ந்தவா் கோ.ஷியாம் கோவிந்த்ராம் பஞ்சாபி (43). இவா், சனிக்கிழமை தனது மனைவியுடன் திரு.வி.கயநகா் பேருந்து நிலையத்தில் இருந்து ஏழுகிணறு மின்ட் தெருவுக்கு அரசுப் பேருந்தில் சென்றாா்.

மின்ட் பேருந்து நிலையத்தில் இறங்கிய அவா், அங்குள்ள ஒரு வங்கிக்கு சென்றபோது, தனது பையை திறந்து பாா்த்தாா். அதில் இருந்த 18 கிராம் தங்க நகை, இரு வைர மோதிரங்கள்,டெபிட் அட்டை, இரு கைப்பேசிகள் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து ஷியாம் கொடுத்த புகாரின் பேரில் ஏழுகிணறு காவல் நிலையத்தில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT