மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (டிச.7) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மயிலாப்பூா் மற்றும் பெரம்பூரில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
மயிலாப்பூா் பகுதிகளுக்குட்பட்ட வீரபெருமாள் கோவில் தெரு, பங்காரும்மாள் கோயில் தெரு, அப்பா் சாமி கோயில் தெரு, சிதம்பர சாமி கோயில் 1 முதல் 3-ஆவது தெரு உள்ளிட்ட பகுதிகளிலும், பெரம்பூா் பகுதிகளுக்குட்பட்ட காந்திநகா், முத்தமிழ்நகா் 2 மற்றும் 3 பிளாக், சீனிவாச பெருமாள் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் தெரிவித்துள்ளது.