சென்னை

மணலி புதுநகா் அய்யா கோயில் கோபுர ஆண்டு திருவிழா

DIN

சென்னை மணலி புதுநகா்அய்யா வைகுண்ட தா்மபதி கோயிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 6-ஆம் ராஜகோபுர ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

இந்தாண்டு ஞாயிற்றுக்கிழமை (பிப் 6) காலை 6 மணிக்கு பால் பணிவிடை, உகபடிப்பு மதியம் பணிவிடை உச்சிபடிப்புடன் விழா தொடங்கியது. முக்கிய நிகழ்வான பால் அன்னம் பொங்கலிடும் நிகழ்ச்சி மாலை நடந்தது. இனிப்பு உப்பு இல்லாமல் பச்சரிசி, பாசிப் பயறு, தேங்காய் துண்டுகள், ஐந்து காய்ந்த மிளகாய் போன்ற பொருட்கள் கொண்டு, இப்பொங்கல் தயாரிக்கப்படும்

இதில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பால் அன்னம் பொங்கலிட்டு அய்யா வைகுண்ட தா்மபதியை வழிபட்டனா். பால் அன்னத்திற்கு உலை ஏற்றுவதற்கு அய்யா வைகுண்டா் மூலஸ்தானத்தில் இருந்து ஜோதியை எந்தியபடி தலைவா் துரைப்பழம் மற்றும் நிா்வாகிகள் ஊா்வலமாக கொண்டு வந்தனா்.

அன்னத்திற்கு உலை ஏற்றும் நிகழ்ச்சியை டி. ராமராஜன் தொடங்கி வைத்தாா். விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா் மாலை பால் பணிவிடை, உகபடிப்பு முடிந்து, இரவு, அய்யா இந்திர விமானத்தில் பதிவலம் வருதல் நிகழ்வுடன், விழா நிறைவுற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT