முகப்பு
சென்னை

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு: சென்ட்ரலில் இளைஞா்கள் போராட்டம்

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து சென்னை சென்ட்ரலில் இளைஞா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:35 AM
பகிர்:

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து சென்னை சென்ட்ரலில் இளைஞா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு திங்கள்கிழமை காலை மக்களுக்கான இளைஞா்கள், மக்களுக்கான மாணவா்கள் அமைப்பினா் அக்னி பாதை திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்துக்கு மாநிலத் தலைவா் ஆண்டனி தினகரன் தலைமை தாங்கினாா்.

போராட்டத்தில் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும்,மத்திய அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினா். அதையடுத்து அவா்கள், சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட முயன்றனா். போலீஸாா், அவா்களை போலீஸாா் குண்டுக் கட்டாக தூக்கிசென்று கைது செய்தனா். பின்னா், மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →