முகப்பு
தமிழ்நாடு

மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்பு

Updated On : 18 மார்ச், 2026 at 9:14 PM
பகிர்:

ரமலான் பண்டிகையையொட்டி வருகிற மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் பிற்பகல் 2 மணி வரை செயல்படும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ரமலான் பண்டிகையையொட்டி வருகிற சனிக்கிழமை (மாா்ச் 21) தேசிய விடுமுறை தினமாகும். ஆகவே, தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் செயல்படும் புகா் மின்சார ரயில் டிக்கெட் பதிவு கணினி மையங்கள் சனிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும். மேலும், அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி புகா் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →