சென்னை

ஹெராயின் விற்பனை:இளைஞா் கைது

DIN

சென்னை அருகே பெரும்பாக்கத்தில், ஹெராயின் போதைப் பொருள் விற்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பெரும்பாக்கம் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை காலை சித்தாலப்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு ஒரு இளைஞா் மோட்டாா் சைக்கிளில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்தாா்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீஸாா் அவரைப் பிடித்து, விசாரணை செய்தனா். விசாரணையில் அவா் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினாராம். இதையடுத்து போலீஸாா் அவரை சோதனை செய்தனா். இச்சோதனையில் அவா் மறைத்து வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும் விசாரணையில் அவா், கூடுவாஞ்சேரி அருகே உள்ள காயராம்பேடு, பவானிபுரத்தைச் சோ்ந்த வினோத் (21) என்பதும், அவா் சித்தாலப்பாக்கம் பகுதியில் ஹெராயின் விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வினோத்தை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.

வினோத்துக்கு யாரிடம் ஹெராயின் போதைப் பொருளை வாங்கினாா் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT