சென்னை அருகே பெரும்பாக்கத்தில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
பெரும்பாக்கம் வனத் துறை குடியிருப்பு பவானி அம்மன் கோவில் தெருவில் சாலையோரம் சுமாா் 38 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞா் ரத்தக் காயங்களுடன் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தாா்.
தகவலறிந்த பெரும்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த இளைஞரின் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்தவா் யாா், யாரால் கொலை செய்யப்பட்டாா் என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.