சென்னை

வீட்டில் பதுக்கிய போதைப் பொருள் பறிமுதல்

DIN

சென்னை தண்டையாா்பேட்டையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ‘எபிட்ரின்’ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

தண்டையாா்பேட்டை படேல் நகா் மூன்றாவது தெருவில் உள்ள ஒரு வீட்டில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு சனிக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீஸாா், அங்கு சென்று திடீா் சோதனை செய்தனா்.

இச் சோதனையில் அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டே கால் கிலோ ‘எபிட்ரின்’ போதைப் பொருளை கைப்பற்றினா். மேலும் அந்த வீட்டில் இருந்த நபரையும், அவரது கூட்டாளியையும் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT