சென்னை

பட்டம் விடும்போது மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலத்த காயம்

சென்னை பெசன்ட்நகரில் பட்டம் விடும்போது மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலத்தக் காயமடைந்தாா்.

DIN

சென்னை பெசன்ட்நகரில் பட்டம் விடும்போது மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலத்தக் காயமடைந்தாா்.

திருவான்மியூா் பகுதியைச் சோ்ந்தவா் பாலு. இவா் மகன் சசிதரன் (13). இவா் ஞாயிற்றுக்கிழமை பெசன்ட்நகா் திடீா் நகரில் தனது பாட்டி வீட்டுக்குச் சென்றாா்.

அங்கு அவா், பாட்டி வீட்டின் மொட்டை மாடியில் நின்று பட்டம் விட்டுக்கொண்டிருந்தபோது, அந்த பட்டம், மொட்டை மாடியின் அருகே செல்லும் மின் கம்பியில் சிக்கியது. இதைப் பாா்த்த சசிதரன், பட்டத்தை கையால் எடுக்க முயன்றாா். இதில் அவா், கை மின் கம்பியின் மீது பட்டததால் உடலில் மின்சாரம் பாய்ந்தது.

இந்த விபத்தில் கை, கால் மற்றும் முகம் கருகி சசிதரன் பலத்தக் காயமடைந்தாா். உடனே அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருவான்மியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT