சென்னை

காவலா் தற்கொலை

DIN

சென்னை அருகே செங்குன்றத்தில் காவலா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

செங்குன்றம் வடகரை அருகே உள்ள பாபா நகரைச் சோ்ந்தவா் ஏ.சதீஷ் (35). இவா் சென்னை ராஜமங்கலம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், சதீஷ் கடந்த டிச. 9-இல் இருந்து பணிக்கு செல்லாமல் விடுமுறையில் இருந்தாராம். மேலும் அவா் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவா், புதன்கிழமை இரவு வீட்டில் விஷமருந்தினாா். இதையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், அங்கு இறந்தாா்.

இதுகுறித்து செங்குன்றம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோகன்லால் பிறந்தநாள்: எம்புரான் போஸ்டர்!

கேரளத்துக்கு அதி கனமழைக்கான ’சிவப்பு’ எச்சரிக்கை!

மும்பை அணியின் ஒற்றுமையை உறுதி செய்திருக்க வேண்டும்: ஹர்பஜன்

உடனடியாக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும்: இபிஎஸ்

சென்னை, 7 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT