சென்னையில் நாளை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் 
சென்னை

சென்னையில் நாளை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்

சென்னை மாவட்டத்தில் நாளை (பிப்.4) அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

DIN


சென்னை: சென்னை மாவட்டத்தில் நாளை (பிப்.4) அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

தொடர் மழையின் காரணமாக  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்யும் வகையில் நாளை அனைத்து பள்ளிகளும் முழுநேரமும் செயல்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கியது. இதனால் நவம்பர் மாதத்தில் பெரும்பாலான நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக மாணவர்களின் பாதுகாப்புக் கருதி கனமழை பெய்த நாள்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இதனால், மழையால் பள்ளிகளுக்கு விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமை (பிப்.4ஆம் தேதி) சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT