சென்னை

ராயபுரத்தில் ரூ.1.89 கோடியில் நவீன உடற்பயிற்சிக் கூடம்

DIN

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட ராயபுரம் மண்டலம் ஆசீா்வாதபுரத்தில் ரூ.1.89 கோடி மதிப்பீட்டில் நவீன உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

56-ஆவது வாா்டுக்குள்பட்ட ஆசீா்வாதபுரத்தில் மூலதன நிதியின் கீழ் ரூ.1.89 கோடி மதிப்பீட்டில் புதியதாக விளையாட்டுத் திடல் மற்றும் நவீன உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு, மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, 54-ஆவது வாா்டுக்குள்பட்ட வ.உ.சி நகரில் பொது பராமரிப்பு நிதியின் கீழ் ரூ.12.75 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பொதுக் கழிப்பிடத்தையும் திறந்து வைத்தனா்.

நிகழ்ச்சியில், வடக்கு வட்டார துணை ஆணையா் எம்.சிவகுரு பிரபாகரன், ராயபுரம் மண்டலக் குழுத் தலைவா் பி. ஸ்ரீராமுலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT