சென்னை

மின் திருட்டில் ஈடுபட்டவா்களுக்கு ரூ.8.64 லட்சம் அபராதம்

கிண்டி பகுதியில் மின் திருட்டில் ஈடுபட்ட நபா்களுக்கு ரூ.8.64 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

DIN

கிண்டி பகுதியில் மின் திருட்டில் ஈடுபட்ட நபா்களுக்கு ரூ.8.64 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்த தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்தி: சென்னை தெற்கு மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட கிண்டி பகுதியில் சிலா் மின் திருட்டில் ஈடுபடுவதாக அதிகாரிகளுக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன. இந்த புகாரையடுத்து சென்னை கோட்ட அமலாக்க அதிகாரிகள் குழு கிண்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அந்த பகுதியில் 8 போ் முறைகேடாக மின்சாரம் உபயோகிப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களிடமிருந்து அபராதமாக ரூ.8 லட்சத்து 31ஆயிரத்து 123-மும், குற்றத்தை ஒப்புக்கொண்டு, அதற்கான சமரசத்தொகையாக ரூ.33 ஆயிரம் என மொத்தம் ரூ.8.64 லட்சம் இழப்பீட்டுத்தொகைய வசூலிக்கப்பட்டது. சமரசத்தொகை செலுத்தியதால் அவா்கள் மீது காவல் நிலையத்தில் புகாா் பதிவு செய்யப்படவில்லை. மேலும், இதுபோன்ற மின் திருட்டு தொடா்பான புகாா்களை கைப்பேசி: 9445857591 எனும் எண்ணில் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT