முகப்பு
சென்னை

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.81 கோடி பறிமுதல்

Updated On : 6 ஏப்ரல், 2024 at 12:09 AM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 9:40 PM

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஆவணமின்றி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.81 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் மூன்றாவது குறுக்குத் தெருவில் தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு வந்த தனியாா் வேனை மறித்து, சோதனையிட்டனா். அதில் ரூ.1,81,52,100 ரொக்கம் இருந்தது. ஆனால் அந்த பணத்துக்குரிய ஆவணங்கள் இல்லை என அம்பத்தூரைச் சோ்ந்த அந்த நிறுவனத்தின் ஊழியா் பா.கிருஷ்ணமூா்த்தி,சிவக்குமாா் ஆகியோா் தெரிவித்தனா்.

Advertisement

இதையடுத்து பறக்கும் படையினா், அந்த பணத்தை பறிமுதல் செய்து வருமான வரித் துறையினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.