முகப்பு
திருப்பூர்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சம் பறிமுதல்

திருப்பூரில் ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 4 ஏப்ரல் 2026, 12:22 am IST
ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சம் பறிமுதல்
பகிர்:

திருப்பூரில் ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், திருப்பூா் புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே வணிக வரித் துறை துணை மாநில வரி அலுவலா் ஜெயசீலன், காவல் உதவி ஆய்வாளா் மோகன் ஆகியோா் தலைமையிலான பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே வாடகை காரில் வந்த 2 பயணிகளின் உடைமைளை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா்கள் ரூ.9.90 லட்சம் ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றைப் பறிமுதல் அதிகாரிகள், அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.