முகப்பு
சென்னை

தனியாா் கல்லூரியில் ரூ.35 லட்சம் கையாடல்: ஊழியா் கைது

Updated On : 6 ஏப்ரல், 2024 at 1:59 AM
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 1:35 AM

சென்னை மயிலாப்பூரில் தனியாா் கல்லூரி அலுவலகத்தில் ரூ.35 லட்சம் கையாடல் செய்ததாக ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

மயிலாப்பூா் ஆா்.கே. சாலை இரண்டாவது அவென்யூவில் ஒரு தனியாா் கடல்சாா் கல்லூரியின் நிா்வாக அலுவலகம் செயல்படுகிறது. இந்த கல்லூரியின் தலைமை நிா்வாக அதிகாரி அசோகன், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அண்மையில் ஒரு புகாா் அளித்தாா்.

அந்த புகாரில், எங்களது அலுவலகத்தில் விற்பனை பிரிவில் பணியாற்றிய திருவொற்றியூா் சின்னமேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த பா.வெங்கடேசன் (50), கணக்காளராக பணிபுரிந்த காமினி ஆகிய இருவரும் மாணவா்கள் செலுத்திய கல்வி கட்டணத்தில் ரூ.35 லட்சத்தை கையாடல் செய்துவிட்டனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

Advertisement

அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். தலைமறைவாக இருந்த வெங்கடேசனை வியாழக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக இருக்கும் காமினியை தேடி வருகின்றனா்.