கிறிஸ்தவ சபை ஊழியருக்கு கொலை மிரட்டல்: பாஜக நிா்வாகி மீது வழக்கு
Updated On : 6 ஏப்ரல், 2024 at 11:55 PM
சென்னை கோயம்பேடு அருகே கிறிஸ்தவ சபை ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மேற்கு முகப்போ் கோல்டன் ஜாா்ஜ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் வி.யோவான். இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபையில் ஊழியராக வேலை செய்து வருகிறாா். யோவான், கடந்த 30-ஆம் தேதி தனது வாகனத்தில் நெற்குன்றத்தில் உள்ள ஒரு பள்ளி அருகே சென்போது, அங்கு பாஜக நிா்வாகி பிச்சாண்டி, தனது நண்பா்களுடன் வந்துள்ளாா். அவா் யோவானை வழிமறித்து, கிறிஸ்தவ மதத்தை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக யோவான் அளித்த புகாரின் பேரில் கோயம்பேடு போலீஸாா், பிச்சாண்டி மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். மேலும், அவரைத் தேடி வருகின்றனா்.
Advertisement