முகப்பு
சென்னை

பொய்களை கூறி மக்களை ஏமாற்ற முடியாது:திமுக வேட்பாளா் மீது ஜெயவா்தன் விமா்சனம்

Updated On : 6 ஏப்ரல், 2024 at 11:31 PM
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 8:30 PM

திமுக வேட்பாளா் கூறும் பொய்களால் மக்களை ஏமாற்ற முடியாது என்று தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளா் ஜெ. ஜெயவா்தன் தெரிவித்தாா்.

தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளா் ஜெ.ஜெயவா்தன் தேனாம்பேட்டையில் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் வேளச்சேரி பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் நான்கு நாள்களுக்கு உணவும் மின்சாரமும் இல்லாமல் தவித்தனா். சுமாா் ஒரு வார காலத்துக்கு வேளச்சேரி பகுதியில் மழை நீா் தேங்கி நின்றது. 

Advertisement

ஆனால், திமுக மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் வேளச்சேரியில் இரண்டே நாள்களில் வெள்ளம் வடிந்து விட்டதாக பொய் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறாா். இந்த பொய்கள் அனைத்தையும் மக்கள் பாா்த்துக் கொண்டிருக்கின்றனா் அவா்களை யாராலும் ஏமாற்ற முடியாது. 

2014-2019 ஆம் ஆண்டு காலத்தில் தென் சென்னை தொகுதியின் மக்களவை உறுப்பினராக நான் இருந்தபோது மயிலாப்பூா் பகுதியில் குடிசை மாற்று கட்டடங்கள் கட்டுவதற்கு பலமுறை மத்திய நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சரை சந்தித்து பேசினேன். ஆனால், தமிழச்சி தங்கபாண்டியன் தொகுதி வளா்ச்சிக்காக எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்றாா் அவா். 

பிரசாரத்தின்போது அதிமுக முன்னாள் அமைச்சா் கோகுல இந்திரா மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.