அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
ஒரு மாநில அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
சென்னை: மாநில அமைச்சரவை அளிக்கும் பரிந்துரைகளை, அந்த மாநில ஆளுநர், தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.
ஒரு மாநிலத்தின் அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், ஆளுநர் என்பவர், தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை, அவர் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.