முகப்பு
சென்னை

மூதாட்டியிடம் 10 பவுன் தங்க நகை பறிப்பு

Updated On : 10 ஏப்ரல், 2024 at 3:01 AM
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 7:55 PM

சென்னை: சென்னை அருகே ஆதம்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 10 பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது.

ஆதம்பாக்கம் கணேஷ்நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் வெ.பத்மாவதி (61). ஆதம்பாக்கம் கணேஷ்நகா் பிரதான சாலையில் திங்கள்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த ஒரு நபா், பத்மாவதி அணிந்திருந்த 10 பவுன் எடையுள்ள இரு தங்கச் சங்கிலிகளை பறித்துக் கொண்டு தப்பினாா்.

ஆதம்பாக்கம் போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

Advertisement