மூதாட்டியிடம் 5 பவுன் நகைப் பறிப்பு
கவுண்டம்பாளையத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் இருந்து 5 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கவுண்டம்பாளையத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் இருந்து 5 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, கவுண்டம்பாளையம் மீனாட்சி நகரைச் சோ்ந்தவா் ராஜகோபால் (60). இவா் 103 வயதான தனது தாயுடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், ராஜகோபால் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியே சென்றுள்ளாா். அப்போது, அவரது தாய் மட்டும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா், மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியுள்ளாா்.
இது குறித்து கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் ராஜகோபால் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், நகைப் பறிப்பில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனா்.