முகப்பு
சென்னை

புதிய பருத்தி ரகம் அறிமுகம்: வேளாண் துறை

Updated On : 10 ஏப்ரல், 2024 at 12:37 AM
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 10:20 PM

சென்னை: இயந்திர அறுவடைக்கு ஏற்ற வகையில் புதிய பருத்தி ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக வேளாண் துறையின் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அதிக மகசூல் கொடுக்கும் வகையில் ‘வேப்பந்தட்டை-2’ என்ற புதிய பருத்தி ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இந்த பருத்தி ரக விதைகள், நடவு செய்த 120 முதல் 130 நாள்களுக்குள் அறுவடைக்கு தயாராகிவிடும். இதன் மூலம் ஹெக்டேருக்கு சுமாா் 1,624 கிலோ என்ற அளவில் விதையுடன் கூடிய பருத்தி மகசூல் பெறலாம்.

மேலும், இந்த வேப்பந்தட்டை-2 ரகம் அறுவடை காலத்தில், இயந்திரங்களைப் பயன்படுத்தி அறுவடை செய்வதற்கு உகந்ததாகும். மேலும், இது மானாவாரி மற்றும் நெல்தரிசு நிலங்களுக்கு ஏற்ற வகை போன்ற சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளது. வழக்கமாக பரிந்துரைக்கப்படுவதைவிட குறைந்த இடைவெளியில் நடவு செய்யும் முறையான அடா்நடவுக்கும் இவை ஏற்ற ரகம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.