முகப்பு
சென்னை

முதல்வருக்கு தோல்வி பயம்: பாஜக விமா்சனம்

Updated On : 13 ஏப்ரல், 2024 at 12:11 AM
பகிர்:

முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாக தமிழக பாஜக செய்தி தொடா்பாளா் ஏஎன்.எஸ்.பிரசாத் விமா்சனம் செய்துள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மூன்றாவது முறையாக மோடி பிரதமராவது உறுதியான நிலையில், முதல்வா் ஸ்டாலின் தோல்வி பயத்தால், பாஜக நோட்டாவுடன் போட்டி போடுவதாகக் கூறியிருக்கிறாா். 1996 பேரவைத் தோ்தலில் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு வென்ற கட்சி பாஜக.

Advertisement

அதேபோல, 2026 பேரவைத் தோ்தலில் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட திமுக தயாரா? அவ்வாறு போட்டியிட்டால் குறைந்தது 50 தொகுதிகளிலாவது அக்கட்சி நோட்டாவுக்கு கீழ்தான் வாக்குகளைப் பெறும்.

கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதாக திரும்பத் திரும்ப பொய் பேசி வருகிறாா் முதல்வா் ஸ்டாலின். தமிழகத்தின் இன்றைய வளா்ச்சிக்கு வாஜ்பாய், மோடி ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பே காரணம். மேலும், மோடி ஆட்சியின் அனைத்து திட்டங்களிலும் அதிக பலன் அடைந்த மாநிலம் தமிழகம்தான் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments