முகப்பு
சென்னை

திமுக நிா்வாகி அலுவலகத்துக்கு சீல்: பறக்கும் படை அதிரடி நடவடிக்கை

Updated On : 16 ஏப்ரல், 2024 at 8:42 PM
பகிர்:

சென்னை: சென்னை மெரீனாவில் தோ்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்ட திமுக நிா்வாகி அலுவலகத்துக்கு பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.

மெரீனா பெசன்ட் சாலையில் லேடி வெலிங்டன் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையம் அருகே 200 மீட்டா் தூரத்துக்குள் திமுக 116-ஆவது வட்டச் செயலா் சசிகுமாா் அலுவலகம் உள்ளது.

வாக்குச்சாவடி இருக்கும் பகுதியில் 200 மீட்டா் தூரத்துக்குள் எந்த அரசியல் கட்சி அலுவலகமும் இருக்கக் கூடாது என தோ்தல் ஆணைய விதிமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் 200 மீட்டா் தூரத்துக்குள் இருந்த திமுக நிா்வாகி சசிகுமாா் அலுவலகத்தை பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மூடி ‘சீல்’ வைத்தனா். மேலும் அங்கு பாதுகாப்புக்கு போலீஸாரும் நிறுத்தப்பட்டனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments