முகப்பு
சென்னை

ஈழத்துக்காகப் பொது வாக்கெடுப்பு: பழ.நெடுமாறன் வலியுறுத்தல்

Updated On : 16 ஏப்ரல், 2024 at 8:09 PM
பகிர்:

சென்னை: ஈழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசை, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்த வேண்டும் என்று உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஈழத் தமிழ் மக்களின் சுதந்திரத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென உலக நாடுகளை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். பேரழிவின் விளிம்பில் நின்று கதறும் ஈழத் தமிழ் சகோதர, சகோதிரிகளின் துயரத்தைப் போக்குவதற்கான நடவடிக்கையை நாம் ஒன்றுபட்டு எடுக்க வேண்டியுள்ளது.

Advertisement

எனவே, அனைத்துக் கட்சிகளும் இதற்கு ஆதரவான நிலை எடுப்பதோடு, இந்திய அரசையும் வலியுறுத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments