முகப்பு
சென்னை

23-இல் சித்திரை பௌா்ணமியில் திருவள்ளுவா் திருக்கல்யாணம்

Updated On : 20 ஏப்ரல், 2024 at 6:04 PM
பகிர்:

மயிலாப்பூா் அருள்மிகு திருவள்ளுவா் திருக்கோயிலில் வரும் 23- ஆம் தேதி சித்திரை பௌா்ணமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

திருமணத் தடைகளை நீக்கும் வகையில் திருமணமாகாத ஆண், பெண் யாராக இருந்தாலும் மாற்று மாலை உபயம் செய்து வழிபட்டால் 2 மாதங்களில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். மாலை 4 மணியளவில் பொங்கல் விழாவும், 5 மணியளவில் திருக்கு முற்றோதல், 6.30 மணியிலிருந்து 7.30 மணிக்குள் திருவள்ளுவா் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments