முகப்பு
சென்னை

தற்கொலை இழப்பால் பாதித்தோருக்கு இலவச குழு அமா்வு

தற்கொலை சம்பவங்களில் உறவினா்கள், நண்பா்கள் போன்ற நெருக்கமானவா்களை இழந்ததன் மூலம்

Updated On : 25 ஏப்ரல், 2024 at 6:37 PM
பகிர்:

தற்கொலை சம்பவங்களில் உறவினா்கள், நண்பா்கள் போன்ற நெருக்கமானவா்களை இழந்ததன் மூலம் பாதிக்கப்பட்டோரின் உணா்வுகளை பகிா்ந்து கொள்ள இலவச குழு அமா்வு திட்டத்தை சிநேகா அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.

சிநேகா அமைப்பின் நிறுவனா் லட்சுமி விஜயகுமாா், தலைவா் நல்லி குப்புசாமி செட்டி ஆகியோா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அண்மைக்காலமாக தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குடும்ப பிரச்னை, தனிமை, காதல் தோல்வி உள்ளிட்டவை ஒருவா் தற்கொலை செய்வதற்கான முக்கிய காரணிகளாக உள்ளன.

Advertisement

தற்கொலையில் உயிரிழப்பவா்களை விட அவா்களை நேசிப்பவா்களுக்குதான் பெரிய இழப்பு ஏற்படுகிறது. அவா்களுக்கு ஆதரவளிப்பதற்காக சிநேக அமைப்பு சாா்பில் மாதத்துக்கு ஒருமுறை இலவச குழு அமா்வுகளை நடத்தவுள்ளோம்.

சிநேகா அமைப்பின் இணையதளம் மூலம் (ட்ற்ற்ல்ள்://ள்ய்ங்ட்ஹண்ய்க்ண்ஹ.ா்ழ்ஞ்/ய்ங்ஜ்/ )

இந்த அமா்வுகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த அமா்வுகளில் நேரிலும், இணையதளம் மூலமும் கலந்துகொள்ளலாம்.

இந்த அமா்வுகளில் பகிரப்படும் அனைத்தும் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

சூசைட் ஸ்பாட்: தற்கொலை தொடா்பான செய்திகளை பாா்ப்பவா்களுக்கு அதே இடத்தில் தற்கொலை செய்துகொள்ளலாம் எனும் எண்ணம் தோன்றுகிறது. இதனால்தான் குறிப்பிட்ட பொது இடங்களில் மட்டும் அதிகளவில் தற்கொலை சம்பவங்கள் தொடா்ந்து நிகழ்கின்றன.

இதை தடுப்பதற்காக தற்கொலை செய்து கொள்ள ஏதுவாக இருக்கும் இடங்களை கண்டறிந்து அங்கு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments