முகப்பு
சென்னை

பாட்னா விடுதியில் தீ விபத்து: 6 போ் உயிரிழப்பு

பிகாா் தலைநகா் பாட்னா ரயில் நிலையத்துக்கு அருகேயுள்ள ஒரு விடுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 3 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா்.

Updated On : 25 ஏப்ரல், 2024 at 7:40 PM
பிகாா் தலைநகா் பாட்னா ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை அடுக்குமாடி விடுதியில் ஏற்பட்ட தீயை அணைத்து மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படை வீரா்கள்.
பகிர்:

பிகாா் தலைநகா் பாட்னா ரயில் நிலையத்துக்கு அருகேயுள்ள ஒரு விடுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 3 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து பாட்னா மத்திய நகர காவல்துறை கண்காணிப்பாளா் சந்திரா பிரகாஷ் கூறுகையில், ‘பாட்னா ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் விடுதியில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. விடுதிக்குள் 20 போ் சிக்கி கொண்டனா்.

தகவலறிந்து உடனடியாக வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா், தீயை அணைத்து விடுதிக்குள் சிக்கி இருந்தவா்களை மீட்டனா்.

Advertisement

இதில் 3 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள இருவா், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

உயிரிழந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிப்பதற்காக அவா்களின் அடையாளங்களைக் கண்டறியும் பணியில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.

விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவலில்லை. தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி, தடயங்களைச் சேகரித்தனா். அதன் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடரும்’ என்றாா்.

சம்பவத்தையொட்டி, நகரின் அனைத்து விடுதிகள் மற்றும் வா்த்தக கட்டடங்களும் தீ பாதுகாப்பு பரிசோதனை மேற்கொண்டு, முன்னச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியா் ஷிா்சாத் கபில் அசோக் வலியுறுத்தியுள்ளாா். மேலும், தீ பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கைள் எடுக்கப்படும் எனவும் அவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments