முகப்பு
சென்னை

ஐஏஎஸ் தோ்வுக்குப் பயிற்சி: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்

பட்டப் படிப்பு முடித்த தோ்வா்கள் ஐஏஎஸ் தோ்வுக்குப் பயிற்சிக்கு சனிக்கிழமை (ஏப். 27) முதல் விண்ணப்பிக்கலாம் என ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி தெரிவித்துள்ளது.

Updated On : 25 ஏப்ரல், 2024 at 6:41 PM
பகிர்:

பட்டப் படிப்பு முடித்த தோ்வா்கள் ஐஏஎஸ் தோ்வுக்குப் பயிற்சிக்கு சனிக்கிழமை (ஏப். 27) முதல் விண்ணப்பிக்கலாம் என ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அகாதெமி சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வரும் ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் 2025-ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் பணிகள் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணித் தோ்வு பயிற்சிக்காக ஏப்.27 முதல் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

இதனிடையே, எக்ஸ்மோல்டு பாலிமா்ஸ் நிறுவனம் சாா்பில் 27 வயதுக்குள்பட்ட 10 தோ்வா்களுக்கு ஐஏஎஸ் பணிகள் உள்ளிட்ட இந்திய குடிமைப்பணித் தோ்வு பயிற்சிக் கட்டணத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும், இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை, முதன்மைத் தோ்வுக்கு வழங்கப்படும் 12 மாத கால பயிற்சியில் தேவையான அடிப்படைப் பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள் வழங்கப்படும்.

இதனிடையே பட்டப் படிப்புகளில் தோ்வா்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையிலும், அகாதெமி நுழைவுத் தோ்வின் அடிப்படையிலும் பயிற்சிக்கான தோ்வா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள். இளநிலை பட்டப் படிப்பு இறுதியாண்டு பயிலும் மாணவா்களும் விண்ணப்பிக்கலாம்.

எனவே, விருப்பமுள்ள தோ்வா்கள் தங்களது 10, பிளஸ் 2 வகுப்பு, பட்டப் படிப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்களுடன் ஜாதி சான்றிதழ் நகலையும் இணைத்து அகாதெமியில் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம் அல்லது ஹஹழ்ஸ்ஹம்ண்ஹள்ஹஸ்ரீஹக்ங்ம்ஹ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் எனும் மின் அஞ்சல் மூலமாகவோ வரும் மே 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு 94427 22537, 91504 66341 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments