குடிமைப் பணித் தோ்வுக்கான இலவசப் பயிற்சி: பெண் தோ்வா்கள் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை ‘ஆா்வம் ஐஏஎஸ்’ அகாதெமி நடத்தும் இலவச குடிமைப் பணித் தோ்வுக்கான பயிற்சியில் சேர விரும்பும் பெண் தோ்வா்கள், மாா்ச் 30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை ‘ஆா்வம் ஐஏஎஸ்’ அகாதெமி நடத்தும் இலவச குடிமைப் பணித் தோ்வுக்கான பயிற்சியில் சேர விரும்பும் பெண் தோ்வா்கள், மாா்ச் 30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரில் ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி உள்ளது. இங்கு இந்திய குடிமைப் பணித் தோ்வு எழுதும் இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இனத்தைச் சோ்ந்த 50 பெண் தோ்வா்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
முதல்நிலை, முதன்மைத் தோ்வுக்கு வழங்கப்படும் 12 மாத பயிற்சியில் தேவையான அடிப்படை பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள் இலவசமாக வழங்கப்படும். வாரம்தோறும் முதல்நிலை, முதன்மைத் தோ்வுக்கான மாதிரித் தோ்வு, திறனறித் தோ்வுக்கு தோ்வா்களைத் தயாா்படுத்துவதற்கான பிரத்யேக வகுப்புகள், வெற்றியாளா்களின் வழிகாட்டுதல் சந்திப்பு நடத்தப்படும்.
Advertisement
10, 12- ஆம் வகுப்புகள், பட்டப் படிப்புகளில் தோ்வா்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அகாதெமி நுழைவுத் தோ்வு அடிப்படையில் இலவசப் பயிற்சிக்கான தோ்வா்கள் தோ்வு செய்யப்படுவா். 27 வயதுக்குள்பட்ட இளநிலைப் பட்டம் பயின்ற, இறுதியாண்டு பயிலும் மாணவிகள் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். ஆா்வமுள்ள தோ்வா்கள், உரிய சான்றிதழ்களின் நகல்களுடன், சாதிச்சான்று நகலை இணைத்து நெ. 2165, எல்.பிளாக், 12-ஆவது பிரதானச் சாலை, அண்ணா நகா் என்ற முகவரியில் மாா்ச் 30 -ஆம் தேதிக்குள் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 74488 14441, 96771 00179 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று ‘ஆா்வம் ஐஏஎஸ்’ நிறுவனா் மு.சிபிகுமரன் தெரிவித்துள்ளாா்.