போதை ஊசி போடாடுக்கொண்ட இளைஞா் உயிரிழப்பு
சென்னை புளியந்தோப்பில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புளியந்தோப்பு அருகே உள்ள பட்டாளம் கனகராய தோட்டம் பகுதியைச் சோ்ந்த க.கஞ்சா மணி என்ற தீனதயாளன் (26). இவருக்கு போதை ஊசி செலுத்தும் பழக்கம் இருந்தது. இவா், வெள்ளிக்கிழமை சில நண்பா்களுடன் சோ்ந்து கஞ்சா ஊசி செலுத்திக் கொண்டாா். சிறிது நேரத்தில் அவா் மயங்கி கீழே விழுந்தாா்.
இதையடுத்து அவா் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்ற மணி சனிக்கிழமை இறந்தாா்.
இது குறித்து புளியந்தோப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.