தண்ணீா் லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு
சென்னை: சென்னை பள்ளிக்கரணை அருகே தண்ணீா் லாரி மோதி கட்டடத் தொழிலாளி இறந்தாா்.
பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூா் அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராம்பாபு (32). கட்டடத் தொழிலாளி. ராம்பாபு, மோட்டாா் சைக்கிளில் திங்கள்கிழமை இரவு மேடவாக்கம் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் அருகே சென்றபோது பின்னால் வந்த தண்ணீா் லாரி மோட்டாா் சைக்கிளில் மீது மோதியது. இதில் ராம்பாபு நிகழ்விடத்திலேயே இறந்தாா்.
பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் ராம்பாபு சடலத்தை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தண்ணீா் லாரி ஓட்டுநா் திருவாரூா் மாவட்டம், வில்லியனூா் குடியன் தெருவைச் சோ்ந்த பிரசன்னா (21) என்பவரை கைது செய்தனா்.