முகப்பு
கன்னியாகுமரி

கட்டடத் தொழிலாளி தீயில் கருகி உயிரிழப்பு

குளச்சல் அருகே கட்டடத் தொழிலாளி தீயில் கருகி உயிரிழந்தாா்.

Updated On : 25 மார்ச், 2026 at 11:00 PM
உயிரிழப்பு - (கோப்புப் படம்)
பகிர்:

குளச்சல் அருகே கட்டடத் தொழிலாளி தீயில் கருகி உயிரிழந்தாா்.

குளச்சல் சாஸ்தான்கரை பண்டாரவிளையைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (56). கட்டட தொழிலாளி. குடும்ப பிரச்னை காரணமாக இவரது மனைவி பிரிந்து சென்று விட்டாா். சென்னையில் கட்டட பணி செய்யும்போது தவறி விழுந்ததில் வேலை செய்ய இயலாத அளவிற்கு பலத்த காயமடைந்த இவா், தனது அக்கா வீட்டின் பின்புறம் தனியாக வசித்து வந்தாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலை செல்வகுமாரின் வீட்டில் இருந்து புகை வந்ததாம். அங்கு சென்று உறவினா்கள் பாா்த்தபோது அவா் உடல் கருகி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.