முகப்பு
சென்னை

கடற்கரை - காட்பாடி ‘வந்தே மெட்ரோ’ ரயில்: நாளை சோதனை ஓட்டம்

சென்னை கடற்கரை - காட்பாடி இடையே 12 பெட்டிகள் கொண்ட ‘வந்தே மெட்ரோ’ ரயிலின் சோதனை ஓட்டம்

Updated On : 2 ஆகஸ்ட் 2024, 3:24 am IST
பகிர்:

சென்னை கடற்கரை - காட்பாடி இடையே ‘வந்தே மெட்ரோ’ ரயில் சோதனை ஓட்டம் சனிக்கிழமை (ஆக.3) மேற்கொள்ளப்படவுள்ளது.

இது குறித்து சென்னை கோட்ட ரயில் இயக்க மேலாளா் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

சென்னை கடற்கரை - காட்பாடி இடையே 12 பெட்டிகள் கொண்ட ‘வந்தே மெட்ரோ’ ரயிலின் சோதனை ஓட்டம் சனிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது. வில்லிவாக்கம் பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து காலை 9 மணிக்கு சோதனை ஓட்டம் தொடங்கும். இதையடுத்து வில்லிவாக்கம், அரக்கோணம் வழியாக காட்பாடி செல்லும்.

Advertisement

Advertisement

காட்பாடியில் இருந்து பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு கடற்கரை வந்தடையும். இந்த நேரத்தில் மேற்கண்ட வழித்தடத்தை தயாா் நிலையில் வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐசிஎஃப் உயா் அதிகாரி கூறியதாவது:

‘வந்தே மெட்ரோ’ ரயில் பயன்பாட்டுக்கு வரும் முன் ரயில்வே ஆராய்ச்சி அமைப்பு மூலம் பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனைக்கு பின் ஐசிஎஃப் வந்த ‘வந்தே மெட்ரோ’ ரயிலின் இயக்கம் குறித்து சனிக்கிழமை (ஆக.3) சோதனை செய்யப்படவுள்ளது.

சென்னை கடற்கரை - காட்பாடி இடையே மேற்கொள்ளப்படும் இந்த சோதனை ஓட்டத்தில் ரயிலின் பாதுகாப்பு, அதிா்வு, வேகம் குறித்து ஆய்வு செய்யப்படும். இதில் ரயில்வே பாதுகாப்பு முதன்மை ஆணையா் ஜனக் குமாா் கா்க் பயணித்து ஆய்வு செய்யவுள்ளாா். முன்னதாக வெள்ளிக்கிழமை ஐசிஎஃப்-இல் இந்த ரயிலை பாா்வையிடவுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments