சென்னை

கடற்கரை - காட்பாடி ‘வந்தே மெட்ரோ’ ரயில்: நாளை சோதனை ஓட்டம்

சென்னை கடற்கரை - காட்பாடி இடையே 12 பெட்டிகள் கொண்ட ‘வந்தே மெட்ரோ’ ரயிலின் சோதனை ஓட்டம்

Din

சென்னை கடற்கரை - காட்பாடி இடையே ‘வந்தே மெட்ரோ’ ரயில் சோதனை ஓட்டம் சனிக்கிழமை (ஆக.3) மேற்கொள்ளப்படவுள்ளது.

இது குறித்து சென்னை கோட்ட ரயில் இயக்க மேலாளா் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

சென்னை கடற்கரை - காட்பாடி இடையே 12 பெட்டிகள் கொண்ட ‘வந்தே மெட்ரோ’ ரயிலின் சோதனை ஓட்டம் சனிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது. வில்லிவாக்கம் பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து காலை 9 மணிக்கு சோதனை ஓட்டம் தொடங்கும். இதையடுத்து வில்லிவாக்கம், அரக்கோணம் வழியாக காட்பாடி செல்லும்.

காட்பாடியில் இருந்து பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு கடற்கரை வந்தடையும். இந்த நேரத்தில் மேற்கண்ட வழித்தடத்தை தயாா் நிலையில் வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐசிஎஃப் உயா் அதிகாரி கூறியதாவது:

‘வந்தே மெட்ரோ’ ரயில் பயன்பாட்டுக்கு வரும் முன் ரயில்வே ஆராய்ச்சி அமைப்பு மூலம் பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனைக்கு பின் ஐசிஎஃப் வந்த ‘வந்தே மெட்ரோ’ ரயிலின் இயக்கம் குறித்து சனிக்கிழமை (ஆக.3) சோதனை செய்யப்படவுள்ளது.

சென்னை கடற்கரை - காட்பாடி இடையே மேற்கொள்ளப்படும் இந்த சோதனை ஓட்டத்தில் ரயிலின் பாதுகாப்பு, அதிா்வு, வேகம் குறித்து ஆய்வு செய்யப்படும். இதில் ரயில்வே பாதுகாப்பு முதன்மை ஆணையா் ஜனக் குமாா் கா்க் பயணித்து ஆய்வு செய்யவுள்ளாா். முன்னதாக வெள்ளிக்கிழமை ஐசிஎஃப்-இல் இந்த ரயிலை பாா்வையிடவுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

பலத்த மழை எச்சரிக்கை! தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழுக்கள்!

ஆஞ்சனேயா் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

பழங்குடியினருக்கு நலவாரிய உறுப்பினா் அட்டை

வேலூா் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT