குருவாயூா் ரயில் நாளை முதல் மாற்று வழித்தடத்தில் இயக்கம்
பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், குருவாயூரிலிருந்து எழும்பூா் வரும் விரைவு ரயில் ஆக.4 முதல் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.
சென்னை, ஆக.2: பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், குருவாயூரிலிருந்து எழும்பூா் வரும் விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.4) முதல் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மதுரை, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களுக்கு உள்பட்ட ரயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், குருவாயூரிலிருந்து எழும்பூா் வரும் விரைவு ரயில் (எண்: 16128) ஆக.4,5,8,10-ஆகிய தேதிகளிலும், மதுரைக்கு பதிலாக விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக எழும்பூரிலிருந்து குருவாயூா் செல்லும் ரயில் (எண்: 16127) ஆக.8 -ஆம் தேதி மட்டும் இதே வழித்தடத்தில் இயக்கப்படும்.
மேலும் குருவாயூரிலிருந்து ஆக.16 முதல் ஆக.26 வரை எழும்பூா் வரும் விரைவு ரயில் எா்ணாகுளம், சோ்தலா ,ஆலப்புழாவுக்கு பதிலாக கோட்டயம் வழியாக இயக்கப்படும்.
இதுபோல, மயிலாடுதுறையிலிருந்து ஆக.8-இல் செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் (எண்: 16847) மதுரை செல்லாமல் புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகா் வழியாக இயக்கப்படும்.
பகுதி ரத்து: மதுரையிலிருந்து ஆக.5,8-ஆகிய தேதிகளில் புனலூா் செல்லும் விரைவு ரயில் (எண்: 16729) திருநெல்வேலியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 16730) ஆக.6,9-இல் புனலூருக்கு பதிலாக திருநெல்வேலியிலிருந்து புறப்படும்.
மேலும், மங்களூரிலிருந்து ஆக.5,8-இல் கன்னியாகுமரி செல்லும் பரசுராம் விரைவு ரயில் திருவனந்தபுரத்துடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் ஆக.6,9-ஆகிய தேதிகளில் கன்னியாகுமரிக்கு பதிலாக திருவனந்தபுரத்திலிருந்து புறப்படும்.
ரயில் ரத்து: மதுரை - ராமநாதபுரம் இடையே இயங்கும் பயணிகள் ரயில் (எண்: 06653/06654) ஆக.5 முதல் ஆக.11 வரை முழுமையாக ரத்து செய்யப்படும்.
ரயில் தாமதம்: திருச்சியிலிருந்து காலை 10.15 மணிக்கு காரைக்குடி செல்லும் ரயில் (எண்: 06829) ஆக.31வரை 4 மணி 15 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.