முகப்பு
சென்னை

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை

கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை

கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 15 ஆகஸ்ட், 2024 at 7:40 PM
பகிர்:

சென்னை, ஆக. 15: கோவை, நீலகிரி உள்பட 4 மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஆக.16, 17) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கேரள மாநிலம் கடலோர பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும்

வெள்ளிக்கிழமை (ஆக.16) முதல் ஆக.21-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன்

கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை எச்சரிக்கை: ஆக.16-இல் நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளிலும், ஆக.17-இல் கோவை, நீலகிரி, திருப்பூா், தேனி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில்

மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஆக.16-இல் திருப்பூா், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா் மாவட்டங்களிலும், ஆக.17-இல் திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

ஆக.18-இல் கோவை, நீலகிரி, திருப்பூா், தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் மாவட்டங்களிலும், ஆக.19-இல் கோவை, நீலகிரி, திருப்பூா், தேனி, திண்டுக்கல், விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூா், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை, புகா் பகுதிகளில் ஆக.16, 17 ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு (மில்லி மீட்டரில்): தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் 120 மி.மீ. மழை பதிவானது. க.பரமத்தி (கரூா்) 110, புலிப்பட்டி (மதுரை), சிட்டம்பட்டி (மதுரை) - தலா 90.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: ஆக.16-19 வரை மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →