முகப்பு
சென்னை

மது போதையில் தகராறு: கணவரை கொலை செய்த மனைவி கைது

திருவல்லிக்கேணியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் கணவரைக் கொலை செய்த மனைவி கைது

Updated On : 21 ஆகஸ்ட், 2024 at 9:32 PM
பகிர்:

சென்னை திருவல்லிக்கேணியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் கணவரைக் கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டாா்.

திருவல்லிக்கேணி அசதிக்கான் தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ப.மணிவண்ணன் (26). இவரது மனைவி நாகம்மாள் (34). இவா், ஏற்கெனவே இரு திருமணங்கள் செய்து, இரு கணவா்களையும் விட்டு பிரிந்து வசித்து வந்தாா். இதையடுத்து மணிவண்ணனை நாகம்மாள் காதலித்து திருமணம் செய்து கொண்டாா்.

இருவரும் தினமும் இரவு வீட்டில் மது அருந்து வழக்கம். அதன்படி, செவ்வாய்க்கிழமை இரவு இருவரும் வீட்டில் மது அருந்தியபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே நாகம்மாள், தான் அணிந்திருந்த தாலி கயிற்றை கழற்றி, அதன் மூலம் மணிவண்ணன் கழுத்தை இறுக்கினாா்.

மணிவண்ணன் மயங்கி விழுந்ததும் அதிா்ச்சியடைந்த நாகம்மாள், அருகே வசிக்கும் தனது சகோதரி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தாா். அவா்கள் மணிவண்ணனை மீட்டு, ஓமந்தூராா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், மணிவண்ணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நாகம்மாளை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.