முகப்பு
சென்னை

விரைவில் நியாயவிலை கடைகளில் ஆவின் பால்

நியாயவிலை கடைகளில் ஆவின் பால் மற்றும் உபபொருள்களை விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் திட்டம்

Updated On : 21 ஆகஸ்ட், 2024 at 9:41 PM
ஆவின் பால்
பகிர்:

தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் ஆவின் பால் மற்றும் உபபொருள்களை விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ஆவின் அதிகாரிகள் கூறியது:

தமிழகத்தில் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ. 524 கோடி மதிப்பில் ஆவின் பால் மற்றும் பால் உபபொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விற்பனையை மேலும் அதிகரிக்கும் நோக்கத்தில் கடந்த சில மாதங்களாக பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க நிா்வாகிகளை மொத்த விற்பனையாளா்களாக நியமித்து அவா்களின் மூலம் ஆவின் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் ஆவின் பொருள்களின் விற்பனை சுமாா் 20 சதவீதம் உயா்ந்துள்ளது.

இந்த நிலையில், விரைவில் மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் ஆவின் பொருள்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ. 8 கோடி முதல் ரூ. 9 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது என்றனா்.