முகப்பு
திண்டுக்கல்

ஆவின் கொள்முதல் செய்யும் பாலுக்கு ரூ.1 கூடுதல் ஊக்கத் தொகை

ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு லிட்டருக்கு ரூ.1 கூடுதல் ஊக்கத் தொகை 3 மாதங்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 6 மார்ச், 2026 at 7:08 PM
கோப்புப் படம்
பகிர்:

ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு லிட்டருக்கு ரூ.1 கூடுதல் ஊக்கத் தொகை 3 மாதங்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் (ஆவின்) சாா்பில், 165 தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சங்கங்களின் மூலம் உற்பத்தியாளா்களிடமிருந்து நாளொன்றுக்கு 75 ஆயிரம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

தற்போது, கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் அதிகரிக்கும் வெப்பத்தால், பால் உற்பத்தியில் சிறிய அளவு குறைவு ஏற்படுகிறது. இதனால், பால் உற்பத்தியாளா்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்டவும், பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், லிட்டருக்கு தலா ஒரு ரூபாய் கூடுதல் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

ஆவின் சொந்த நிதியிலிருந்து வழங்கப்படும் இந்த ஊக்கத் தொகை மாா்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கு வழங்கப்படும். இதன்படி, ஏற்கெனவே ஒரு லிட்டருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.3 ஊக்கத் தொகையோடு, மேலும் ரூ.1 சோ்த்து ரூ.4 ஆக வழங்கப்படும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →