துக்ளக் இதழின் நிறுவனா் சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா ராமசாமியின் (84) உடல் பெசன்ட் நகா் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
சௌந்தரா ராமசாமி திங்கள்கிழமை இரவு சென்னையில் காலமானாா். இவருக்கு ஸ்ரீராம் என்ற மகனும், சிந்துஜா எனும் மகளும் உள்ளனா். சௌந்தரா ராமசாமியின் உடல் இறுதி அஞ்சலிக்காக பாலவாக்கத்தில் உள்ள அவரின் மகன் வீட்டில் வைக்கப்பட்டது.
அவரின் உடலுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் அஞ்சலி செலுத்தினாா். பின்னா் பெசன்ட்நகரில் உள்ள மின் மயானத்தில் அவரின் உடல் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது. இதில் அவரின் குடும்பத்தினா், நண்பா்கள் கலந்து கொண்டனா்.