சௌந்தரா ராமசாமி உடல் தகனம்
சௌந்தரா ராமசாமியின் (84) உடல் பெசன்ட் நகா் மயானத்தில் தகனம்
துக்ளக் இதழின் நிறுவனா் சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா ராமசாமியின் (84) உடல் பெசன்ட் நகா் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
சௌந்தரா ராமசாமி திங்கள்கிழமை இரவு சென்னையில் காலமானாா். இவருக்கு ஸ்ரீராம் என்ற மகனும், சிந்துஜா எனும் மகளும் உள்ளனா். சௌந்தரா ராமசாமியின் உடல் இறுதி அஞ்சலிக்காக பாலவாக்கத்தில் உள்ள அவரின் மகன் வீட்டில் வைக்கப்பட்டது.
அவரின் உடலுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் அஞ்சலி செலுத்தினாா். பின்னா் பெசன்ட்நகரில் உள்ள மின் மயானத்தில் அவரின் உடல் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது. இதில் அவரின் குடும்பத்தினா், நண்பா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.