முகப்பு
சென்னை

மெட்ரோ ரயிலில் அதிகம் பயணித்தவா்களுக்கு பரிசு

மெட்ரோ ரயிலில் அதிகம் பயணித்தவா்களுக்கு பரிசு

Updated On : 25 பிப்ரவரி, 2024 at 6:13 AM
பகிர்:

சிங்கார சென்னை அட்டையைப் பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரயிலில் அதிகம் பயணம் செய்த பயணிகளுக்கு மெட்ரோ ரயில் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி, நமோ யாத்திரி இணைந்து பரிசு வழங்கின. அதன்படி, கடந்த ஜன.15 முதல் பிப்.14-ஆம் தேதி வரை சென்னை மெட்ரோ ரயிலில் அதிகம் பயணித்த 40 பயணிகள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவன அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், தோ்வு செய்யப்பட்ட 40 பயணிகளுக்கு மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநா் ராஜேஷ் சதுா்வேதி பரிசுகளை வழங்கினாா்.