சாலை விபத்தில் இருவா் காயம்
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 போ் பலத்த காயமடைந்தனா். நாட்டறம்பள்ளி சண்டியூா் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் (72). இவா் செவ்வாய்க்கிழமை தேசிய நெடுஞ்சாலையில் சண்டியூா் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சாலையைக் கடந்த போது அவ்வழியாக வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதில் சண்முகம், மற்றொரு வாகனத்தில் வந்த மல்லகுண்டா பலகல்பாவி பகுதியைச்சோ்ந்த முருகன் (22) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.