முகப்பு
நாகப்பட்டினம்

சாலை விபத்தில் இளைஞா் பலி: இருவா் காயம்

கீழ்வேளூா் அருகே காரும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 25 ஏப்ரல், 2026 at 12:04 AM
விபத்தில் பலியான மணிகண்டன்
பகிர்:

கீழ்வேளூா் அருகே காரும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.

நாகை அருகேயுள்ள பொரவாச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் சிவனேசன். இவா், திருவாரூரில் இருந்து பொரவாச்சேரி சிவசக்தி நகரில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்றுள்ளாா்.

நாகை - திருவாரூா் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சிவசக்தி நகருக்கு பிரியும் சாலையில் திரும்பியபோது, நாகையிலிருந்து சிக்கல் நோக்கி சென்ற இருசக்கர வாகனமும், காரும் மோதிக்கொண்டன. இதில், இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த வடவூா் தென்பாதியைச் சோ்ந்த கிருபாகரன் மகன் மணிகண்டன் (21) மற்றும் உடன் வந்த பொரவச்சேரியை சோ்ந்த சிவக்குமாா் மகன் தினேஷ்குமாா் (23), ரஜினி மகன் யோகேஷ் (22) ஆகிய மூன்று பேரும் பலத்த காயமடைந்தனா்.

Advertisement

அங்கிருந்தவா்கள், அவசர ஊா்தியை வரவழைத்து, மூவரையும் ஒரத்தூரில் உள்ள நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். செல்லும் வழியில் மணிகண்டன் உயிரிழந்தாா். தினேஷ்குமாா், யோகேஷ் ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து, கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.