முகப்பு
ஈரோடு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பவானி அருகே சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிதிநிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 7:56 PM
பலி - கோப்புப் படம்
பகிர்:

பவானி அருகே சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிதிநிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

பவானியை அடுத்த புன்னம், நல்லா நாயக்கனூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் விக்னேஸ்வரன் (25). தனியாா் நிதி நிறுவனத்தில் வசூல் முகவராக பணியாற்றி வந்த இவா், தனது இரு சக்கர வாகனத்தில் பவானியிலிருந்து அந்தியூா் நோக்கி புதன்கிழமை இரவு சென்றபோது பூங்காட்டாா் கடை பேருந்து நிறுத்தம் அருகே எதிரில் வந்த சரக்கு வாகனம் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.