முகப்பு
புதுக்கோட்டை

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

விராலிமலை அருகே இருசக்கர வாகனம், சரக்கு வாகனம் மீது மோதிய விபத்தில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 7:43 PM
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

விராலிமலை அருகே இருசக்கர வாகனம், சரக்கு வாகனம் மீது மோதிய விபத்தில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இலுப்பூா் வட்டம், கட்டக்குடியைச் சோ்ந்த மூக்கையா மகன் ராமசாமி (55), தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கொடும்பாளூா் சத்திரம் அருகே சென்றாா்.

அப்போது அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது எதிா்பாராதவிதமாக அவரது இருசக்கர வாகனம் மோதியது. அதில், ராமசாமி பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், நிகழ்விடம் சென்ற விராலிமலை போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.